பெருந்தகையீர்,
வணக்கம்.
சைவ வேளாளர் பேரவை - சென்னை என்ற இவ்வமைப்பு 1958 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. திருநெல்வேலியிருந்து புலம் பெயர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பணிக்காகவும், தொழிலுக்காகவும், தொண்டுக்காகவும் தங்கி விட்ட சிறுபான்மையிரான நாம் நமது மக்களை அடையாளம் கண்டுகொண்டு, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து பரஸ்பர உதவிகளைச் செய்து கொள்ளவும், திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், தொழில்களுக்கும், பணிகளுக்கும், பதவிகளுக்கும் வழிகாட்டி உயர்த்திக்கொள்ளவும், உயர்ந்துகொள்ளவும், நமது இனப் பெருமக்களுக்கென பள்ளி,கல்லுரிகள் திருமணக்கூடங்கள்,நிறுவவும்,பல்வேறு கல்வி உதவிகளைச் செய்யவும்,நமது இளையர்களின் ஆக்கத்தினை ஊக்கப்படுத்தவும் போன்ற செயல்களுக்காகவும் போன்ற உயரிய நோக்கங்களுக்காக நிருவபட்ட்துதான் இந்தப்பேரவை.
இந்தநோக்கங்களை நோக்கி நாம் கடந்து வந்த தூரம் 50ஆண்டுகள் ..ஆயினும் இன்னும் செல்ல வேண்டிய தூரமும் அடையவேண்டிய இலக்கும் தொலைவிலேயே உள்ளன. தடை பல கடந்து பீடு நடை போடும் இப்பேரவையின் செயல்பாடுகளுக்கு சைவ வேளாளர் இனம் சார்ந்த நம் அனைவர்க்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்பதை உணர்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இக்கருத்தில் நீங்கள் ஒவோருவரும் உடன்படுவிர்கள் என நம்புகிறோம்.நமது கடமைகளாக எத்தனையோ விதங்களில் நீங்கள் பேரவைக்கு உதவலாம்.
Read More